விவசாயிகள் பி.எம். கிசான் திட்டத்தில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்


விவசாயிகள் பி.எம். கிசான் திட்டத்தில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்
x
தினத்தந்தி 25 Jun 2023 12:19 PM GMT (Updated: 26 Jun 2023 7:33 AM GMT)

நெமிலி வட்டாரத்தில் விவசாயிகள் பி.எம். கிசான் திட்டத்தில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று வேளாண்மை உதவி இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

ராணிப்பேட்டை

நெமிலி

நெமிலி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அருணாகுமாரி கூறியதாவது:-

நெமிலி வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் பி.எம். கிசான் திட்டத்தின் மூலம் பெற்றுவரும் ஊக்கத்தொகையை தொடர்ந்து பெற ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.

பிரதம மந்திரியின் பி.எம். கிசான் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு 4 மாதத்திற்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் என வருடந்தோறும் ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த திட்டத்தில் தொடர்ந்து பயனடைய இ.கே.ஒய்.சி. முழுமையாக பூர்த்தி செய்யவேண்டும்.

இ.கே.ஒய்.சி. மற்றும் வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை வருகிற 27-ந் தேதிக்குள் (செவ்வாய்க்கிழமை) இணைக்க வேண்டும். தவறும் பட்சத்தில் ஊக்கத்தொகை வருவது நிறுத்தப்படும்.

எனவே விவசாயிகள் அருகில் உள்ள வங்கி, இ சேவை மையங்கள் மற்றும் தபால் நிலையங்களை அணுகி ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story