விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் - கலெக்டர் தகவல்


விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் - கலெக்டர் தகவல்
x

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு திருவள்ளூர், திருத்தணி மற்றும் பொன்னேரி ஆகிய வருவாய் கோட்ட அலுவலகங்களில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் விவசாயம் தொடர்பான குறைகளுக்கு தீர்வுக்கான அந்தந்த வருவாய் கோட்டங்களில் நடைபெறும் கூட்டங்களில் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இக்கூட்டத்தில் வேளாண் சார்ந்த துறை அலுவலர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. வருவாய் கோட்ட அளவில் தீர்க்கப்படாத மனுக்கள் மட்டும் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறும் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.


Next Story