மருமகளை இரும்பு கம்பியால் தாக்கிய மாமனார்; 2-வது திருமணத்துக்கு தடை போட்டதால் ஆத்திரம்


மருமகளை இரும்பு கம்பியால் தாக்கிய மாமனார்; 2-வது திருமணத்துக்கு தடை போட்டதால் ஆத்திரம்
x

நெல்லை அருகே 2-வது திருமணத்துக்கு தடை போட்டதால் ஆத்திரம் அடைந்த முதியவர், மருமகளை இரும்பு கம்பியால் தாக்கினார்.

திருநெல்வேலி

நெல்லை அருகே 2-வது திருமணத்துக்கு தடை போட்டதால் ஆத்திரம் அடைந்த முதியவர், மருமகளை இரும்பு கம்பியால் தாக்கினார்.

2-வது திருமணத்துக்கு முயற்சி

நெல்லை அருகே இட்டேரி பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவருடைய மகன் தமிழரசன். இவர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி முத்துமாரி (வயது 28).

தங்கராஜ் மனைவி இறந்து விட்டார். இதையடுத்து அவர் 2-வது திருமணம் செய்வதற்கு முயற்சி செய்து வந்துள்ளார். இதற்காக தனது மகனிடம் வீட்டை தனது பெயரில் எழுதி தருமாறு கேட்டு வந்துள்ளார்.

இரும்பு கம்பி அடி

இந்த நிலையில் தற்போது தமிழரசன் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது மகனிடம் வீட்டை கேட்டு தங்கராஜ் தகராறு செய்துள்ளார். ஆனால் இதற்கு தமிழரசன் மறுப்பு தெரிவித்து உள்ளார். மேலும் தமிழரசன் மற்றும் மருமகள் முத்துமாரி ஆகியோர் சேர்ந்து 2-வது திருமணம் செய்யக்கூடாது என்று கண்டித்து உள்ளனர்.

இதனால் தங்கராஜ் ஆத்திரம் அடைந்தார். இந்த நிலையில் நேற்று காலை மகன் தமிழரசன் அருகில் உள்ள கடைக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த தங்கராஜ், இரும்பு கம்பியை எடுத்து முத்துமாரி தலையில் தாக்கினார். இதில் அவர் பலத்த காயம் அடைந்து அலறினார். அவரது சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அதற்குள் தங்கராஜ் அங்கிருந்து ஓடிவிட்டார்.

வலைவீச்சு

இதுகுறித்து தகவல் அறிந்த முன்னீர்பள்ளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் முத்துமாரியை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கராஜை தேடி வருகின்றனர்.


Next Story