திருக்கோவிலூர் அருகே சோகம்: தூக்குப்போட்டு தந்தை, மகன் தற்கொலை


திருக்கோவிலூர் அருகே சோகம்:  தூக்குப்போட்டு தந்தை, மகன் தற்கொலை
x

திருக்கோவிலூர் அருகே தந்தை, மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

கணவன்-மனைவி இடையே தகராறு

திருக்கோவிலூர் அருகே உள்ள மேல்வாலை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அர்ஜூனன்(வயது 55), விவசாயி. இவர் நேற்று இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். இதைபார்த்த அவருடைய மனைவி ஏன் மதுகுடித்து விட்டு வந்தீர்கள்? எனக்கேட்டு அர்ஜூனனை கண்டித்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த அர்ஜூனன் தனது மனைவியை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

தந்தை-மகன் தற்கொலை

இதையடுத்து மனைவியை அடித்ததால் மனம் வருந்திய அர்ஜூனன் வீட்டின் பின்புறம் உள்ள பூவரச மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது வீட்டிற்கு வந்த அவருடைய மகன் உதயகுமார்(25) தனது தந்தை தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்ததோடு, துக்கம் தாங்காமல் தானும் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தந்தை-மகன் அடுத்தடுத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை அறிந்த அக்கிராம மக்கள் அர்ஜூனன் வீட்டுக்கு பின்புறம் திரண்டதோடு, இதுபற்றி கண்டாச்சிபுரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அர்ஜூனன், உதயகுமார் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குடும்ப தகராறில் தந்தை-மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story