தோகைமலை அருகே பெண் மாயம்

தோகைமலை அருகே பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் கீரக்கல் மேடு பகுதியை சேர்ந்தவர் குமரவேல். இவரது மனைவி சரண்யா (வயது 22). இந்தநிலையில் கடந்த 14-ந்தேதி சரண்யா தனது தாய் வீடான தோகைமலை அருகே உள்ள தெற்கு வருந்திபட்டிக்கு வந்துள்ளார். இந்தநிலையில் மறுநாள் வீட்டில் இருந்து வெளியே சென்ற சரண்யா வெகுநேரம் ஆகியும் வீட்டுக்கு வரவில்லை.
இதையடுத்து அவரை உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சரண்யாவின் சகோதரர் சக்திவேல் கொடுத்த புகாரின்பேரில், தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து, மாயமான சரண்யாவை தேடி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





