சென்னை வடபழனியில் சினிமா 'மேக்கப்' பெண் கலைஞர் தற்கொலை


சென்னை வடபழனியில் சினிமா மேக்கப் பெண் கலைஞர் தற்கொலை
x

சினிமா ‘மேக்கப்’ பெண் கலைஞர், கனடாவில் வசிக்கும் மகளிடம் வீடியோ காலில் பேசி விட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை

சென்னை வடபழனி, குமரன் காலனி, 9-வது தெருவை சேர்ந்தவர் சத்யபிரியா (வயது 40). இவர், சினிமா துறையில் 'மேக்கப்' கலைஞராக பணிபுரிந்து வந்தார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் தனியாக வசித்து வந்தார். இவருடைய மகள் யோகிதா (22) கனடாவில் தங்கி, பணிபுரிந்து வருகிறார்.

குடிப்பழக்கத்துக்கு ஆளான சத்யபிரியா, நேற்று முன்தினம் இரவு கனடாவில் உள்ள தனது மகளிடம் வீடியோ கால் மூலம் பேசினார். அப்போது அவர், "எனக்கு வாழ பிடிக்கவில்லை. நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன்" என கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த யோகிதா, சென்னையில் உள்ள தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் வீட்டுக்கு சென்று பார்த்தனர். கதவு உள்பக்கமாக பூட்டி இருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சத்யபிரியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வடபழனி போலீசார், தூக்கில் தொங்கிய சத்யபிரியா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story