பெண் தற்கொலை


பெண் தற்கொலை
x
தினத்தந்தி 20 March 2023 12:15 AM IST (Updated: 20 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெரியகுளம் அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தேனி

பெரியகுளம் அருகே உள்ள சருத்துப்பட்டியை சேர்ந்தவர் சீனியம்மாள் (வயது 45). இவரது கணவர் முருகன் ஏற்கனவே இறந்துவிட்டார். சீனியம்மாள் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதியடைந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இந்நிலையில் கடந்த 16-ந் தேதி வயிற்று வலி அதிகரித்ததால் அரளி விதையை (விஷம்) அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதைக்கண்ட உறவினர்கள் அவரை பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story