தூக்குப்போட்டு பெண் தற்கொலை


தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x

மாத்தூரில் கணவன் குடிப்பழக்கத்தை நிறுத்தாததால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கோட்டை

தகராறு

விராலிமலை ஒன்றியம், மாத்தூர் தென்னம்பிள்ளை பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி ஜெயந்தி (வயது 22). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வரும் பாலசுப்பிரமணியனுக்கு தினமும் மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி வீட்டில் தகராறு நடந்து வந்துள்ளது. நேற்று இரவும் பாலசுப்பிரமணியன் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் வழக்கம் போல கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

பெண் தற்கொலை

இந்நிலையில் இன்று காலை பாலசுப்பிரமணியன் வேலைக்கு சென்று விட்டார். மனமுடைந்த நிலையில் வீட்டில் இருந்த ஜெயந்தி தனது பிள்ளைகளை அங்கன்வாடிக்கு அனுப்பி வைத்துவிட்டு தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் இதுகுறித்து பாலசுப்ரமணியனுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜெயந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story