தூக்குப்போட்டு பெண் தற்கொலை

விருத்தாசலம் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
கம்மாபுரம்,
நெய்வேலி வட்டம் 30 காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவருடைய மனைவி பத்மாவதி (வயது 40). இந்த நிலையில் பத்மாவதி பி.கே.விரட்டிக்குப்பத்தில் உள்ள ஒரு முந்திரி தோப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவலின் பேரில் ஊ.மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பத்மாவதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில், பத்மாவதி தற்கொலைக்கான காரணம் என்ன என்பது பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





