தூக்குப்போட்டு பெண் தற்கொலை

தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்துகொண்டாா்
கொடுமுடியை அடுத்த கொந்தளம் குமரப்புரத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருடைய மனைவி செல்வகுமாரி (வயது 43). இவர்களுடைய மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் செல்வகுமாரி சோகமாக இருந்து வந்தார். இந்த நிலையில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் செல்வகுமாரி தூக்குப்போட்டு கொண்டார். இதை கண்டதும் அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே செல்வகுமாரி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





