லட்சுமி நரசிம்மர் கோவிலில்உற்சவம்

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் உற்சவம் நடைபெற்றது.
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் வெள்ளிக்கிழமை உற்சவத்தை முன்னிட்டு பக்தோசித பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள் நாச்சியார் சுவாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மாலையில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட தனித்தனி கேடையத்தில் பக்தோசி பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள் நாச்சியார் ஏழுந்தருளி மங்கள வாத்தியங்களுடன் கோவில் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





