பணியின் போது இறந்த போலீஸ்காரர் குடும்பத்துக்கு நிதியுதவி

பணியின் போது இறந்த போலீஸ்காரர் குடும்பத்துக்கு நிதியுதவி
கோயம்புத்தூர்
பொள்ளாச்சி
பொள்ளாச்சி தாலுகா போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த தலைமை காவலர் ஜவகர்லால் நேரு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பணியின் போது உடல்நல குறைவு காரணமாக இறந்து விட்டார். இந்த நிலையில் 1997-ம் ஆண்டு அவருடன் பணிபுரிந்த போலீஸ் நண்பர்கள் அனைவரும் காவல் காக்கும் உதவும் கரங்கள் சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.
இறந்த போலீஸ்காரர் ஜவகர்லால் நேருவின் வீட்டிற்கு நேரடியாக சென்று தாலுகா போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ், வால்பாறை சரக தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மைக்கேல் சகாயராஜ் ஆகியோர் ரூ.13 லட்சத்து 5 ஆயிரத்து 500-க்கான காசோலையை அவரது மனைவி உஷா ராணியிடம் வழங்கினர். அப்போது இறந்த போலீஸ்காரருடன் பயிற்சி பெற்ற ஆண், பெண் தலைமை காவலர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story






