மின்சாரம் தாக்கி உயிரிழந்த வாலிபர் குடும்பத்துக்கு நிதி உதவி


மின்சாரம் தாக்கி உயிரிழந்த வாலிபர் குடும்பத்துக்கு நிதி உதவி
x
தினத்தந்தி 11 April 2023 6:45 PM GMT (Updated: 11 April 2023 6:45 PM GMT)

முதுகுளத்தூர் அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த வாலிபர் குடும்பத்துக்கு நிதி உதவி வழங்கி அமைச்சர் ராஜகண்ணப்பன் நடவடிக்கை எடுத்து உள்ளார்.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் அருகே உள்ள பூசேரி கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் லிங்கராஜ் (வயது 21). இவர் தேவிபட்டினம் அருகே உள்ள சம்பை கிராமத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் வேலை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதுகுறித்து முதுகுளத்தூர் சட்டமன்ற அலுவலக உதவியாளர்களிடம் தகவல் தெரிவித்தனர். அவர்கள் இது தொடர்பாக அமைச்சர் ராஜகண்ணப்பனின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இதையடுத்து மின்சாரம் தாக்கி உயிரிழந்த லிங்கராஜ் குடும்பத்திற்கு தனது சொந்த நிதி உதவி வழங்க அமைச்சர் நடவடிக்கை எடுத்தார். அதன் பேரில் அமைச்சர் ராஜகண்ணப்பன் சார்பாக முதுகுளத்தூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பூபதி மணி மின்சாரம் தாக்கி உயிரிழந்த லிங்கராஜ் வீட்டுக்கு நேரில் சென்று அவரின் பெற்றோரிடம் நிதி உதவி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பூசேரி ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதி சாந்தகுமார், மாவட்ட பிரதிநிதி கருப்புசாமி, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செங்கை விக்னேஸ்வரன், முதுகுளத்தூர் சட்டமன்ற அலுவலக உதவியாளர்கள் சத்தியேந்திரன், டோனி சார்லஸ், ரஞ்சித், மணிகண்டன், பூசேரி நீர் பாசனத் தலைவர் முருகேசன், கிளைச் செயலாளர்கள் தேரிருவேலி பாஸ்கரன், பூசேரி முகமது , இப்ராஹிம், தி.மு.க. நிர்வாகி பாலச்சந்தர் பலர் உடன்இருந்தனர்.


Next Story