நிதி நிறுவன மோசடி விவகாரம்: வி.சி.க. கவுன்சிலர் கைது


நிதி நிறுவன மோசடி விவகாரம்: வி.சி.க. கவுன்சிலர் கைது
x

திருச்சி எல்ஃபின் நிதி நிறுவன மோசடி விவகாரம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த கவுன்சிலர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி,

திருச்சி மன்னார்புரத்தை சேர்ந்த எல்ஃபின் நிதி நிறுவனம் மீது முதலீட்டாளர்கள் தெரிவித்தபல கோடி ரூபாய் மோசடி புகார்கள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி எல்ஃபின் நிறுவனம் மீதான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.எ

ல்ஃபின் நிறுவனத்தின் உரிமையாளர்களான ராஜா மற்றும் ரமேஷ் ஆகிய இருவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 17 வது வார்டு கவுன்சிலர் பிரபாகரன் என்பவரை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்


Next Story