இலங்கை கடற்படையால் நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு


இலங்கை கடற்படையால் நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு
x

இலங்கை கடற்படையால் நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிக்கப்பட்டனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம், செப்.30-

ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 535 விசைப்படகுகளில் சுமார் 3,000 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தபோது இலங்கை கடற்படையினர் 5 சிறிய கப்பல்களில் அந்த பகுதியில் ரோந்து வந்தனர்.

மீன் பிடித்துக் கொண்டு இருந்த ராமேசுவரம் விசைப்படகுகளை கண்டதும் உடனடியாக அங்கிருந்து செல்லுமாறு எச்சரித்தனர். அதே நேரத்தில் 20-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை சுற்றி வளைத்து கடலில் வீசி இருந்த வலைகளை வெட்டி வீசினார்களாம்.

ஒரு சில படகுகளை கற்களை வீசி தாக்கியதாகவும் மீனவர்கள் கூறினார்கள். இலங்கை கடற்படையினரின் இந்த அத்துமீறிய செயல்களால் ராமேசுவரம் மீனவர்கள் மீன் பிடிக்க முடியாமல் பாதியிலேயே அவசர அவசரமாக கரை திரும்பினர். பெரும்பாலான மீனவர்கள் பெருத்த நஷ்டம் ஏற்பட்டதாக கூறினர்.


Next Story