ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் ெதாடங்கினர்


ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் ெதாடங்கினர்
x

இலங்கை கடற்படையை கண்டித்து ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் நேற்று வேலைநிறுத்தம் தொடங்கினர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

இலங்கை கடற்படையை கண்டித்து ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் நேற்று வேலைநிறுத்தம் தொடங்கினர்.

இலங்கை சிறையில் அடைப்பு

ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீன் பிடிக்க சென்ற 7 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். அவர்களது விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் இலங்கை சிறையில் தவிக்கும் ராமேசுவரம் உள்ளிட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பாரம்பரிய கடல் பகுதியில் தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினர் பிரச்சினை இல்லாமல் மீன் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவரை இலங்கை கடற்படையால் சிறைபிடித்து விடுவிக்கப்படாமல் இலங்கையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்டு கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் நேற்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

ஆர்ப்பாட்டம்

இதனால் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் துறைமுக கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரம் அனைத்து விசைப்படகு மீனவர்கள் இன்று (சனிக்கிழமை) தங்கச்சிமடம் வலசை பஸ் நிறுத்தம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்து உள்ளனர்.


Next Story