கடலில் படகு மூழ்கி தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு


கடலில் படகு மூழ்கி தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு
x

படகு கடலில் மூழ்கி தத்தளித்த 4 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் இருந்து நேற்று 539 விசைப்படகுகளில் 2000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இதில் தங்கச்சிமடத்தை சேர்ந்த நெப்போலியன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் பாலு, அலெக் சாண்டர், லவ்சன், ஆபிரகாம் ஆகிய 4 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் தனுஷ்கோடி அருகே உள்ள நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். நேற்று வழக்கத்தைவிட ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதியில் பலத்த காற்று வீசியதுடன் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதில் விசைப்படகு சேதமாகி கடல்நீர் உள்ளே புகுந்து கடலில் மூழ்க தொடங்கியது.

தொடர்ந்து உயிருக்கு போராடிய நிலையில் படகில் இருந்த 4 மீனவர்களும் தத்தளித்து சத்தம்போட்டனர். அப்போது அந்த பகுதியில் மீன் பிடித்துக ்கொண்டிருந்த தங்கச்சிமடத்தை சேர்ந்த லயோலா என்பவருக்கு சொந்தமான படகில் இருந்தவர்கள் 4 மீனவர்களையும் மீட்டு பாதுகாப்பாக நேற்று மாலை ராமேசுரம் கடற்கரைக்கு அழைத்து வந்தனர்.


Next Story