நித்திரவிளை அருகே மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை


நித்திரவிளை அருகே மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை
x

நித்திரவிளை அருகே மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

கொல்லங்கோடு,

நித்திரவிளை அருகே மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மீனவர் தற்கொலை

நித்திரவிளை அருகே சுனாமி காலனி தூத்தூர் பகுதியை சேர்ந்தவர் வில்பிரட். இவருடைய மகன் சஜூ (வயது 27). மீனவரான இவருக்கு திருமணமாகவில்லை. நேற்றுமுன்தினம் தனது நண்பர்களுடன் அவர் திற்பரப்பு அருவிக்கு குளிக்க சென்றார். பின்னர் அங்கிருந்து மீண்டும் வீட்டுக்கு வந்த அவர் இரவு உணவு சாப்பிடாமல் சகோதரியின் அறைக்கு சென்று தூங்கினார். நேற்று காலை வெகுநேரமாகியும் அந்த அறையின் கதவு திறக்கப்படவில்லை.

இதனால் சந்தேகமடைந்த தாயார் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது துப்பட்டாவால் தூக்கில் தொங்கிய நிலையில் சஜூ பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தாயார் கதறி அழுதார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் நித்திரவிளை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story