கடலில் தவறி விழுந்து மீனவர் சாவு


கடலில் தவறி விழுந்து மீனவர் சாவு
x
தினத்தந்தி 19 Sep 2023 6:45 PM GMT (Updated: 19 Sep 2023 6:46 PM GMT)

கடலில் தவறி விழுந்து மீனவர் இறந்தார்.

ராமநாதபுரம்

தொண்டி

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா, காரங்காடு கிராமத்தை சேர்ந்தவர் ஜான் பிரிட்டோ(வயது 50). இவர் மற்றும் அதே ஊரை சேர்ந்த குணசேகரன்(62), ஆரோக்கியதாஸ்(57), ஆண்ட்ரஸ்(40) ஆகியோர் நேற்று அதிகாலை 3 மணி அளவில் நாட்டுப் படகு ஒன்றில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். படகை ஜான் பிரிட்டோ இயக்கினார். அப்போது திடீரென அவர் மயங்கி தவறி கடலில் விழுந்தார். இதில் ஜான் பிரிட்டோ கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை படகில் சென்ற மற்ற மீனவர்கள் மீட்டு காரங்காடு கடற்கரைக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்து அவர்கள் தொண்டி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று ஜான் பிரிட்டோவின் உடலை கைப்பற்றி திருவாடானை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


Next Story