மீன் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை


மீன் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை
x

வில்லுக்குறியில் கடன் தொல்லையால் மீன் வியாபாரி தூக்குப்போட்டு

கன்னியாகுமரி

திங்கள்சந்தை,

வில்லுக்குறி ஆர்.சி.தெருவை சேர்ந்தவர் லாரன்ஸ் (வயது57), மீன் வியாபாரி. இவருடைய மனைவி டெல்மா. இவர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர். டெல்மா கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால், மகன்கள் 4 பேரும் ராமன்துறையில் உள்ள பாட்டி வீட்டில் வசித்து வருகின்றனர். இதையடுத்து லாரன்ஸ் வேளாங்கண்ணியைச் சேர்ந்த வெண்ணிலா என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். லாரன்சிற்கு கடன் தொல்லை இருந்தது வந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி தனது மகன்களிடம் கூறி வருத்தப்பட்டு வந்துள்ளார். மேலும் அவர் ஆர்.சி. தெருவில் உள்ள வீட்டை விற்று விட்டு மாடத்தட்டுவிளை பண்டாரக்காட்டில் வாடகை வீட்டில் மனைவி, மகளுடன் வசித்து வந்தார்.

இந்தநிலையில் சம்பவத்தன்று மதியம் கடன் தொல்லையால் மனமுடைந்து காணப்பட்ட லாரன்ஸ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சமையல் அறையில் தூக்கில் தொங்கினார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் லாரன்ஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து லாரன்சின் மூத்த மனைவியின் மகன் ஆன்றோ கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story