வெள்ளத்தில் சேதமடைந்த சான்றிதழ்கள்; 15 நாட்களில் வழங்க நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்


வெள்ளத்தில் சேதமடைந்த சான்றிதழ்கள்; 15 நாட்களில் வழங்க நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
x

சேதமடைந்த புத்தகங்கள் மற்றும் சீருடைகளையும் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

சென்னை,

சென்னை எழும்பூரில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு குளிர்கால சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-

"வெள்ளத்தில் சேதமடைந்த சான்றிதழ்களை மீண்டும் பெறுவதற்காக மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடுகளை செய்துள்ளோம். சான்றிதழ்களை 15 நாட்களில் வழங்கிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சேதமடைந்த புத்தகங்கள் மற்றும் சீருடைகளையும் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது."

இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.



Next Story