சென்னையில் மலர் கண்காட்சி - நுழைவு கட்டண விவரம் அறிவிப்பு


சென்னையில் மலர் கண்காட்சி - நுழைவு கட்டண விவரம் அறிவிப்பு
x

சென்னையில் நாளை முதல் 3 நாட்களுக்கு மலர் கண்காட்சி நடைபெறுகிறது.

சென்னை,

சென்னை, தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று சமீபத்தில் சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதன்படி வருகிற ஜூன் 3-ந்தேதி கருணாநிதி பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட இருக்கிறது.

மேலும் கருணாநிதி பிறந்தநாளில் சென்னையில் மலர் கண்காட்சிக்கு அரசு ஏற்பாடு செய்து வருகிறது. கலைவாணர் அரங்கில் ஜூன் 3-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை 3 நாட்கள் மலர் கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இதற்காக ஊட்டி, ஓசூர், திண்டுக்கல், பெங்களூரு, புனேவில் போன்ற இடங்களில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட வகைகளில் கண்ணை கவரும் அழகிய மலர்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில் சென்னையில் மலர் கண்காட்சி நடைபெறுவது இதுவே முதல்முறை ஆகும். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கலைவாணர் அரங்கில், இந்த மலர் கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (வெள்ளிக்கிழமை) துவக்கி வைக்கிறார்.

இந்த நிலையில், நாளை நடைபெறும் மலர் கண்காட்சியை கட்டணம் செலுத்தி பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாணவர்களுக்கு ரூ.20-ம் பெரியவர்களுக்கு ரூ.50 நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


Next Story