ராஜபாளையம் அருகே பூக்குழி திருவிழா


ராஜபாளையம் அருகே பூக்குழி திருவிழா
x
தினத்தந்தி 13 April 2023 12:15 AM IST (Updated: 13 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையம் அருகே பூக்குழி திருவிழா நடந்தது.

விருதுநகர்

ராஜபாளையம்.

ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம், கொம்மந்தபுரம், செட்டியார்பட்டி, முகவூர் ஆகிய பகுதிகளில் பங்குனி பொங்கல் விழாவையொட்டி மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா நடைபெற்றது. இதில் தளவாய்புரம் வடக்கு மாரியம்மன் கோவில், நடுமாரியம்மன் கோவில், தெற்கு மாரியம்மன் கோவில், முகவூர் தெற்கு தெரு மாரியம்மன் கோவில் என நான்கு மாரியம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவில்களின் திருவிழாவை காண சுற்றுப்பகுதியில் உள்ள கிராம மக்கள் வந்திருந்து சாமி தரிசனம் மற்றும் பூக்குழி திருவிழாவை பார்த்தனர். இதையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் மாரியம்மன் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. அக்னி சட்டி, முளைப்பாரி ஊர்வலம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனை தொடர்ந்து காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் பூக்குழி இறங்கினர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

1 More update

Next Story