முதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு வேலூர் பகுதியில் நாளை டிரோன்கள் பறக்க தடை


முதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு வேலூர் பகுதியில் நாளை டிரோன்கள் பறக்க தடை
x

கோப்புப்படம்

முதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு வேலூர் பகுதியில் நாளை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

வேலூர்,

வேலூரில் நாளை தி.மு.க பவள விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.எல். ஏ.க்கள் கலந்து கொள்கின்றனர்.

இதற்காக வேலூர் அடுத்த கந்தனேரியில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே பிரமாண்ட கோட்டை வடிவிலான மேடை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. விழாவில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து இன்று ரெயில் மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்பாடி வருகிறார். இரவு வேலூர் அரசு சுற்றுலா மாளிகை அல்லது தனியார் ஓட்டலில் அவர் தங்குகிறார்.

நாளை மாலை பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு விழா பேருரை ஆற்றுகிறார். முதல் - அமைச்சர் வருகையையொட்டி வேலூர் மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வேலூர் மாவட்ட எல்லைப் பகுதிகளில் சீல் வைக்கப்பட்டுள்ளது. எல்லைப் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு வேலூர் பகுதியில் நாளை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் டிரோன்கள் மற்றும் பெரிய பலூன்கள் பறக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.


Next Story