வளர்பிறை சஷ்டியையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம்


வளர்பிறை சஷ்டியையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம்
x

வளர்பிறை சஷ்டியையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் அகில உலக வேல் திருமடம் தொண்டு அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளை சார்பில் கோவில்களில் அன்னதானம் வழங்கப்படுவது வழக்கம். மேலும் இந்த அறக்கட்டளை மூலம் மாதந்தோறும் வளர்பிறை சஷ்டியையொட்டியும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று வளர்பிறை சஷ்டி என்பதால் பெரம்பலூா் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள செல்வ விநாயகர் கோவிலில் மதியம் முருகனுக்கும், வேலுக்கும் அகில உலக வேல் திருமடம் தொண்டு அறக்கட்டளை சார்பில் சிறப்பு வழிபாடு நடந்தது. அதனை தொடர்ந்து அறக்கட்டளை சார்பில் சுமார் 1,500 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானத்திற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர். அடுத்த மாதம் (ஜூலை) 7-ந்தேதி பெரம்பலூர்-எளம்பலூர் சாலையில் உள்ள பாலமுருகன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, அந்த கோவிலிலும், வருகிற 23-ந்தேதி வளர்பிறை சஷ்டியையொட்டி பெரம்பலூர் செல்வ விநாயகர் கோவிலிலும் இந்த அறக்கட்டளை மூலம் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story