சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

வேலூரில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வேலூர்

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் வேலூர் மாவட்டம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் வில்வநாதன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் புவனேஸ்வரி, இணைசெயலாளர் மரகதம், மாநில செயற்குழு உறுப்பினர் ருக்குமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மாவட்ட செயலாளர் ஏழுமலை கோரிக்கைளை விளக்கி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். காலை சிற்றுண்டியை சத்துணவு திட்டத்துடன் இணைக்க வேண்டும். சத்துணவு அமைப்பாளர்களுக்கு பணிக்கொடை ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதில், சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் பெருமாள் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்துக்கு பின்னர் சத்துணவு ஊழியர்கள் ஊர்வலமாக சென்று கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டர் அலுவலகத்தில் அளித்தனர்.


Next Story