"அடுத்த 3 மணி நேரத்திற்கு.." - தமிழகத்தின் 22 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை


அடுத்த 3 மணி நேரத்திற்கு.. - தமிழகத்தின் 22 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை
x

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக கடந்த சில வாரங்களாக அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகின்றது. குறிப்பாக உள்மாவட்டங்களில் மாலை நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது.

இந்நிலையில் தற்போது தமிழகத்தின் 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இந்நிலையில் சென்னை ,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி,அரியலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் உட்பட மொத்தம் 22 மாவட்டங்களில் மழை பெய்யும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story