ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் வெங்கிடரமணன் மறைவு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்


ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் வெங்கிடரமணன் மறைவு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
x

இந்திய ரிசர்வ் வங்கியின் 18-ஆவது கவர்னராக எஸ். வெங்கிடரமணன் பதவி வகித்தார்.

சென்னை,

இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னராக இருந்தவர் எஸ். வெங்கிடரமணன். இந்திய ரிசர்வ் வங்கியின் 18-ஆவது கவர்னராக பதவி வகித்தார். மேலும் அதற்கு முன்பாக 1985-89 வரையில் மத்திய நிதித் துறைச் செயலாளராகவும் திறம்படப் பணியாற்றி நன்மதிப்பைப் பெற்றவர். இந்த நிலையில் அவர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

இந்த நிலையில் அவரது மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் எஸ். வெங்கிடரமணன் (92) உடல்நலக்குறைவு காரணமாக மறைந்தார் என்றறிந்து வருத்தமடைந்தேன். அவரை இழந்து தவிக்கும் அவரது மகளும் முன்னாள் தலைமைச் செயலாளருமான கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


Next Story