ரூ.20 லட்சத்தில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு அடிக்கல் நாட்டு விழா


ரூ.20 லட்சத்தில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு அடிக்கல் நாட்டு விழா
x
தினத்தந்தி 3 Sept 2023 12:30 AM IST (Updated: 3 Sept 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளத்தில் ரூ.20 லட்சத்தில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

தென்காசி

ஆலங்குளம்:

ஆலங்குளம் பேரூராட்சி 9-வது வார்டு பகுதியில் பொதுமக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் விதமாக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.20 லட்சத்தில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.

மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார். விழாவில் 9-வது வார்டு உறுப்பினர் சுபாஷ் சந்திரபோஸ், ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள் வி.கே.கணபதி, எஸ்.ராதா, பெரியபாண்டியன், அருண், பாபு, கண்ணன், சக்தி, வரதன், செல்லத்துரை, ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


1 More update

Next Story