பிராட்வே பஸ் நிறுத்தத்தில் மரக்கிளை முறிந்து விழுந்து 4 பேர் காயம்


பிராட்வே பஸ் நிறுத்தத்தில் மரக்கிளை முறிந்து விழுந்து 4 பேர் காயம்
x

பிராட்வே பஸ் நிறுத்தத்தில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் 4 பேர் காயமடைந்தனர்.

சென்னை

சென்னை பிராட்வே பஸ் நிறுத்தத்தில் உள்ள பழமைவாய்ந்த மரத்திலிருந்து பெரிய மரக்கிளை நேற்று காலை திடீரென முறிந்து விழுந்தது. இதனால் அங்கு நின்று கொண்டிருந்த பயணிகள் ஓட்டம் பிடித்தனர். இதில் காயத்ரி மற்றும் வசந்தா என்ற 2 பெண்களுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. மேலும், அங்கு நின்று கொண்டு இருந்த அரசு பஸ் கண்டக்டர் சுதாகர் மற்றும் டிரைவர் பாஸ்கர் என்பவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இவர்கள் 4 பேரும் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இந்த தகவலை அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து மரக்கிளையை வெட்டி அகற்றினார்கள். இதனால் பிராட்வே பஸ் நிறுத்தத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.


Next Story