வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக ரூ.5½ லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை


வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக ரூ.5½ லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 26 April 2023 12:15 AM IST (Updated: 26 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கனடா நாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி தனியார் நிறுவன மேலாளரிடம் ரூ.5 லட்சத்து 36 ஆயிரம் மோசடி செய்தனர். இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை

சிவகங்கை

கனடா நாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி தனியார் நிறுவன மேலாளரிடம் ரூ.5 லட்சத்து 36 ஆயிரம் மோசடி செய்தனர். இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெளிநாடு செல்வதற்காக

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நாச்சியார் தெருவை சேர்ந்தவர் அருள் ஜீவக்கனி (34). இவர் மும்பையில் ஒரு தனியார் நிறுவனத்தில் முதுநிலை மேலாளராக பணிபுரிகிறார்.

கடந்த பிப்ரவரி மாதம் அருள் ஜீவக்கனி, கனடா நாட்டிற்கு வேலைக்கு செல்வதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தார். அப்போது அவரிடம் தொடர்பு கொண்ட ஒருவர் கனடா நாட்டிற்கு செல்வதற்கு முன் பணம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். இதை நம்பிய அருள் ஜீவக்கனி பல தவணைகளில் அவரது வங்கி கணக்கில் ரூ.5 லட்சத்து 36 ஆயிரத்து 600 செலுத்தியுள்ளார்.

விசாரணை

பணத்தை பெற்றுக் கொண்ட அந்த நபர் அதன்பின்னர் அருள் ஜீவக்கனியுடன் தொடர்பை துண்டித்து விட்டாராம். இதைத் தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அருள் ஜீவக்கனி சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் தேவகி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

1 More update

Related Tags :
Next Story