2,506 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்


2,506 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்
x

திருவெண்ணெய்நல்லூர், முகையூர் ஒன்றியத்தில் 2,506 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் பொன்முடி வழங்கினார்.

விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர்:

திருவெண்ணெய்நல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் விக்கிரவாண்டி புகழேந்தி, விழுப்புரம் லட்சுமணன், திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சுகம் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா வரவேற்றார். நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு திருவெண்ணெய்நல்லூர், முகையூர் ஒன்றியத்தில் உள்ள 15 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 11-ம் வகுப்பு படிக்கும் 2 ஆயிரத்து 506 மாணவ-மாணவிகளுக்கு ரூ.1 கோடியே 27 லட்சம் மதிப்பிலான சைக்கிள்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், ஒன்றியக்குழு தலைவர்கள் திருவெண்ணெய்நல்லூர் ஓம்சிவசக்திவேல், முகையூர் தனலட்சுமி, பேரூராட்சி துணை தலைவர் ஜோதி, ஒன்றியக்குழு துணைத்தலைவர் கோமதி நிர்மல்ராஜ், பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர் முபாரக்அலிபேக், தி.மு.க. நகர செயலாளர் பூக்கடை கணேசன், நகர தலைவர் செந்தில்முருகன், முன்னாள் தி.மு.க. ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன், ஒன்றிய விவசாய அணி செயலாளர் வெங்கடேசன், திருக்கோவிலூர் தொகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கிருஷ்ணராஜ், தலைமை கழக பேச்சாளர் சிறுவானூர் பரசுராமன், சிறுமதுரை செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story