பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்; சபாநாயகர் அப்பாவு வழங்கினார்


பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்; சபாநாயகர் அப்பாவு வழங்கினார்
x

திசையன்விளை அருகே இடையன்குடி பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை அருகே இடையன்குடி கால்டுவெல் நூற்றாண்டு நினைவு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி, 114 மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கினார்.

மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் வெஸ்லி சாலமோன், சேகரகுரு பர்னபாஸ் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக இடையன்குடியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட உள்ள ரேஷன் கடை கட்டிடத்திற்கு சபாநாயகர் அப்பாவு அடிக்கல் நாட்டினார். அதைத்தொடர்ந்து பெட்டைக்குளம் காதர் மீராசாகிபு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.


Next Story