பரிசோதனை முகாம்


பரிசோதனை முகாம்
x

இலவச பரிசோதனை முகாம் நடைபெற்றது.

திருநெல்வேலி

நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலகம், தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில், நாங்குநேரி சுங்கச்சாவடியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகரன், தேசிய நெடுஞ்சாலைத்துறை மதுரை மண்டல அதிகாரி ஆனந்தராஜ் ஆகியோர் தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்தனர். மேலும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரத்தை வெளியிட்டு பேசினர்.

டவுன் ரோட்டரி சங்க தலைவர் இப்ராஹிம், மாவட்ட சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர் நைனா முகம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகர்வால் கண் ஆஸ்பத்திரி மருத்துவ குழுவினர் டிரைவர்களுக்கு கண் பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினர். ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர் வானுமாமலை, பேச்சிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நாங்குநேரி சுங்கச்சாவடி மேலாளர் மணிகண்டன் செய்து இருந்தார்.

1 More update

Next Story