சட்டப்படிப்பு நுழைவுத்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு


சட்டப்படிப்பு நுழைவுத்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு
x
தினத்தந்தி 3 Oct 2023 4:30 PM GMT (Updated: 3 Oct 2023 4:35 PM GMT)

சட்டப்படிப்பு நுழைவுத்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பில் சேர தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

புதுக்கோட்டை

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழக (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் சட்ட பல்கலைக்கழகங்களில் சட்டப்படிப்பு படிப்பதற்கு அகில இந்திய அளவில் நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வுக்கான சட்டப்படிப்பு நுழைவு தேர்விற்கான பயிற்சி இலவசமாக வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சியினை பெற 18 முதல் 25 வயது நிரம்பிய பிளஸ்-2 வகுப்பு முடித்த மாணவர்கள் மற்றும் நடப்பாண்டில் பிளஸ்-2 வகுப்பு பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும், இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை இணையதளம் வழியாகவும் தேர்வு நடைபெறும் முறை நேரிடையாகவும் நடைபெறும். இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் சட்டப்படிப்பு படிப்பதற்கு ஏனைய நுழைவு தேர்வுகளுக்கும் பயிற்சிகள் வழங்கப்படும்.

பொது நுழைவுத்தேர்வுக்கான சட்டப்படிப்பு நுழைவு தேர்விற்கான பயிற்சி வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் அடுத்த கட்ட தேர்வுகளான, நேர்காணல், குழு விவாதம், எழுத்துத்தேர்வு ஆகியவற்றிக்கும் பயிற்சிகள் வழங்கப்படும். மேற்கண்ட தேர்விற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் பயிற்சி பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

இப்பயிற்சிக்கான கட்டணம் தாட்கோ மூலம் வழங்கப்படும். இது தொடர்பாக மேலும் விவரங்களுக்கு புதுக்கோட்டை தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை 04322-221487 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story