இலவச கண் பரிசோதனை முகாம்


இலவச கண் பரிசோதனை முகாம்
x
தினத்தந்தி 22 May 2023 6:45 PM GMT (Updated: 22 May 2023 6:46 PM GMT)

தூத்துக்குடியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் தூத்துக்குடி எஸ்.ஏ.வி. பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமை தூத்துக்குடி சிவன் கோவில் அருகே திருமண மண்டபத்தில் நடத்தியது. ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் பொன்னு, சங்கர்ராம், ராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து பேசினர். 1973-74-ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சங்க புரவலர் பிரேம்குமார் வரவேற்று பேசினார். முகாமில் அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர்கள் பிரீத்தி, ஸ்ரீனு ஆகியோர் தலைமையிலான குழுவினர் கண் பரிசோதனை செய்தனர். இதில் 262 பேர் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர். முன்னாள் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் மாணவர் தீரமகாராஜன் நன்றி கூறினார்.



Next Story