இலவச கண் சிகிச்சை முகாம்


இலவச கண் சிகிச்சை முகாம்
x

வல்லத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை அருகே வல்லத்தில் இலவச கண்பரிசோதனை முகாம் நடந்தது. வல்லம் ஜமாஅத் தலைவா் அகமது மீரான் தலைமை தாங்கினார். கடையநல்லுார் கே.எம்.எஸ். மருத்துவமனை நிர்வாகக்குழு தலைவா் அப்துல் ரஷீத் முன்னிலை வகித்தார். வல்லம் நேஷனல் பள்ளி தாளாளா் அப்துல்மஜீத் வரவேற்று பேசினார். வல்லம் ஜூம்மா மஜீத் பள்ளிவாசல் தலைமை இமாம் சுல்தான் ஷிபா மெடிக்கல் சென்டரை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார். பின்னா் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இலவச கண்பரிசோதனை முகாமை குற்றாலம் முத்துநகர் அரிமா சங்க பட்டய தலைவா் சண்முகநாதன் தொடங்கி வைத்தார். முகாமில் நெல்லை டாக்டர் அகர்வால் கண்மருத்துவமனை டாக்டா் அபினயா தலைமையில் மருத்துவ குழுவினா் பொதுமக்களுக்கு இலவச கண்பரிசோதனை செய்து, மருந்து, கண்கண்ணாடி, மருத்துவ ஆலோசனை வழங்கினா். முதன்மை முகாம் மேலாளா் மாணிக்கம், விழிஒளி ஆய்வாளா் சிஞ்சு, உதவி விழிஒளி ஆய்வாளா்கள் மனோ, ஹசீனா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

1 More update

Next Story