மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதி விபத்து - வாலிபர் பலி


மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதி விபத்து - வாலிபர் பலி
x

மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதி விபத்துக்கு உள்ளானதில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

வடமதுரை,

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை தாலுகா சின்னகவுண்டனூரைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவருடைய மகன் கார்த்திக் (வயது 24).இவர் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் கரூரிலிருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது வெள்ளப்பாறை என்ற இடத்தில் வந்த போது அவருக்கு எதிரே வந்த சரக்கு வேன் அவர் வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த கார்த்திக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த குஜிலியம்பாறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கார்த்திக்கின் உடலைக் கைப்பற்றி வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 More update

Next Story