மாயனூர் கதவணையில் இருந்து 1 லட்சத்து 95 ஆயிரத்து 81 கனஅடி தண்ணீர் திறப்பு


மாயனூர் கதவணையில் இருந்து 1 லட்சத்து 95 ஆயிரத்து 81 கனஅடி தண்ணீர் திறப்பு
x

மாயனூர் கதவணையில் இருந்து 1 லட்சத்து 95 ஆயிரத்து 81 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

கரூர்

கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரூர் மாவட்டம், மாயனூர் கதவணைக்கு மாலை 4 மணி நிலவரப்படி 1 லட்சத்து 96 ஆயிரத்து 301 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் 4 பாசன வாய்க்காலுக்கு தண்ணீர் திறப்பு போக, மீதம் 1 லட்சத்து 95 ஆயிரத்து 81 கன அடி தண்ணீர் அப்படியே காவிரியில் 98 மதகுகளின் வழியாக திறக்கப்பட்டு வருகிறது. இதனால் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதனால் கரையோர மக்கள் காவிரியில் இறங்கவோ, குளிக்கவே தடை விதிக்கப்பட்டுள்ளது.


Next Story