தெலுங்கானாவில் இருந்து ரெயில் மூலம் ஈரோட்டுக்கு வந்த 2,500 டன் அரிசி


தெலுங்கானாவில் இருந்து ரெயில் மூலம் ஈரோட்டுக்கு வந்த 2,500 டன் அரிசி
x
தினத்தந்தி 19 Oct 2023 8:57 PM GMT (Updated: 19 Oct 2023 8:57 PM GMT)

தெலுங்கானாவில் இருந்து ரெயில் மூலம் ஈரோட்டுக்கு 2,500 டன் அரிசி வந்தது

ஈரோடு

ஈரோடு மாவட்ட பொது வினியோக திட்டத்துக்காக பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து நெல், அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்கள் கொள்முதல் செய்யப்படுகிறது. அதன்படி தெலுங்கானா மாநிலம் ராஜமுந்திரி பகுதியில் இருந்து 2 ஆயிரத்து 500 டன் புழுங்கல் அரிசி கொள்முதல் செய்யப்பட்டது. இந்த அரிசி மூட்டைகள் 42 பெட்டிகள் கொண்ட தனி சரக்கு ரெயில் மூலம் ஈரோட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த ரெயில் நேற்று காலை ஈரோடு ரெயில்வே பணிமனைக்கு வந்தடைந்தது. பின்னர் அரிசி மூட்டைகளை சுமைதூக்கும் தொழிலாளர்கள் ரெயிலில் இருந்து இறக்கி, லாரிகளில் ஏற்றி நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளுக்கு அனுப்பி வைத்தனர். இங்கிருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு, பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story