சதுரகிரியில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு


சதுரகிரியில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு
x

சதுரகிரியில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரியில் சுந்தர மகாலிங்கம் சுவாமி கோவில் அமைந்துள்ளது. நேற்று பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இந்த வழிபாட்டில் கலந்து கொள்ள சென்னை, மதுரை, சேலம், திருச்சி, திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் வனத்துறை கேட்டின் முன்பு குவிந்தனர்.

பின்னர் அவர்கள் மலைப்பாதை வழியாக சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய நடந்து சென்றனர். பவுர்ணமியை முன்னிட்டு மதியம் 12.30 மணிக்கு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 18 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


Next Story