சதுரகிரியில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு


சதுரகிரியில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு
x

சதுரகிரியில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு

விருதுநகர்

வத்திராயிருப்பு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில். இந்த கோவிலில் ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்கள் அதிகாலை முதல் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு குவிந்தனர். வனத்துறை கேட் காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு பக்தர்கள் மலைப்பாதை வழியாக சுவாமி தரிசனம் செய்ய மலையேறி சென்றனர். பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு 18 வகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.பின்னர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இந்த பவுர்ணமி சிறப்பு வழிபாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினால் செய்திருந்தனர்.


Next Story