திருக்கோவிலூர் அருகே பணம் வைத்து சூதாடியவர் கைது


திருக்கோவிலூர் அருகே பணம் வைத்து சூதாடியவர் கைது
x
தினத்தந்தி 27 March 2023 6:45 PM GMT (Updated: 27 March 2023 6:45 PM GMT)

திருக்கோவிலூர் அருகே பணம் வைத்து சூதாடியவர் கைது செய்யப்பட்டாா்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை அருகே உள்ள முருக்கம்பாடியில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மணலூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதன்மோகன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முருக்கம்பாடி வனப்பகுதியில் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த 7 பேர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர். இதையடுத்து போலீசார் விரட்டிச்சென்று ஒருவரை மட்டும் மடக்கிப்பிடித்தனர். மற்ற 6 பேர் தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து பிடிபட்டவரிடம் நடத்திய விசாரணையில் அவர் திருவண்ணாமலை மாவட்டம் பெருமணம் கிராமத்தை சேர்ந்த வடிவேல் மகன் மணிகண்டன்(வயது 26) என்பது தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டனை கைது செய்த போலீசார், தப்பி ஓடிய 6 பேரை தேடி வருகின்றனர். மேலும் அங்கிருந்த 6 மோட்டாா் சைக்கிள்கள், ரூ.150 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story