பெயிண்டர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

பெயிண்டர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
திருச்சி உறையூர் சீனிவாசநகரை சேர்ந்த மூதாட்டியிடம் 6 பவுன் சங்கிலியை பறித்த கொடாப்பு பகுதியை சேர்ந்த பெயிண்டர் பரமேஸ்வரன் (வயது 32) என்பவரை உறையூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் விசாரணையில் அவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் 4 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. இதனையடுத்து அவரை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள பரமேஸ்வரனுக்கு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான நகல் வழங்கப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





