ரேஷன் அரிசி கடத்தியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

ரேஷன் அரிசி கடத்தியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கோவை
கோவை சேரன்நகர் பகுதியில் கடந்த மாதம் 27-ந் தேதி 1½ டன் ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்த முயன்ற கோவை வெள் ளாளப்பட்டியை சேர்ந்த பாபு (வயது 47) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இவர் மீது 13 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் பாபுவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு போலீசார் கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனுக்கு பரிந்துரை செய்தனர்.
இதையடுத்து அவர், பாபுவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து சிறையில் உள்ள பாபுவிடம் அதற்கான உத்தரவு நகலை போலீசார் வழங்கினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





