கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 9 Jun 2023 6:40 PM GMT (Updated: 10 Jun 2023 7:38 AM GMT)

கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா ஒடுகம்பட்டி பகுதியை சோ்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 24). இவர் ஒரு கொலை வழக்கு தொடர்பாக கீரனூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் ரஞ்சித்குமார் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கலெக்டர் மெர்சி ரம்யாவுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து அதற்கான நகலில் ரஞ்சித்குமாரிடம் போலீசார் கையெழுத்து பெற்றனர். மேலும் அவரை திருச்சி மத்திய சிறையில் நேற்று அடைத்தனர்.


Next Story