அரியலூர் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

அரியலூர் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
அரியலூர் ராஜீவ்நகரை சேர்ந்தவர் நித்தியானந்தம் (வயது 26). இவர் மீது வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருந்ததால் கடந்த மே மாதம் அரியலூர் போலீசார் அவரை கைது செய்து ஜெயங்கொண்டம் சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் நித்தியானந்தத்தை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து, கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா உத்தரவின் பேரில் ஜெயங்கொண்டம் சிறையில் இருந்த நித்தியானந்தத்தை போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்து அதற்கான உத்தரவு நகலை சிறைச்சாலை அதிகாரியிடம் வழங்கினார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





