எக்ஸ்பிரஸ் ரெயிலில் கஞ்சா கடத்தல்: சென்டிரல் ரெயில் நிலையத்தில் 2 பயணிகள் கைது


எக்ஸ்பிரஸ் ரெயிலில் கஞ்சா கடத்தல்: சென்டிரல் ரெயில் நிலையத்தில் 2 பயணிகள் கைது
x
தினத்தந்தி 16 Sep 2022 11:08 AM GMT (Updated: 16 Sep 2022 11:08 AM GMT)

சென்டிரல் ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கஞ்சா கடத்திய 2 பயணிகளை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சசிகலா மற்றும் ரெயில்வே போலீசார் இன்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் விஜயவாடாவில் இருந்து சென்டிரல் ரெயில் நிலையம் வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து சந்தேகப்படும் படியாக இருவர் இறங்கி வந்ததை போலீசார் கண்டனர். உடனடியாக அவர்களை மடக்கி பிடித்த போலீசார், அவர்களது பையை சோதனையிட்டனர்.

அப்போது அவர்கள் வைத்திருந்த பையில் 8 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையைம் அழைத்து சென்று விசாரணை செய்ததில் அந்த நபர்கள் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த முருகன்(வயது 22) மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த கவின் குமார்(21) என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்த கஞ்சா பொட்டலங்களை போதைபொருள் தடுப்பு பிரிவிடம் ஒப்படைத்தனர்.


Next Story