பொது பேரவை கூட்டம்


பொது பேரவை கூட்டம்
x
தினத்தந்தி 19 Jun 2023 6:55 PM IST (Updated: 20 Jun 2023 3:33 PM IST)
t-max-icont-min-icon

உடுமலையில் முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்க பொது பேரவை கூட்டம் பொள்ளாச்சி ரோட்டில் உள்ள சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை வளாகத்தில் நடந்தது.

திருப்பூர்

தளி

உடுமலையில் முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்க பொது பேரவை கூட்டம் பொள்ளாச்சி ரோட்டில் உள்ள சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை வளாகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு சங்க தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார். செயலாளர் சக்தி நாயப் சுபேதார ்நடராஜ், பிளைட் லெப்டினட் தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள், சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை இணைந்து நடத்தி வரும் இலவச யூனிபார்ம் சர்வீஸ் மற்றும் போட்டித் தேர்வுபயிற்சி வகுப்புகளுக்கு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கவும், ஆலோசனை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது. மேலும் கலெக்டர் அலுவலக குறை தீர்ப்பு கூட்டத்தில் கொடுக்கப்பட்ட மனுக்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அத்துடன் முன்னாள் ராணுவ வீரர்களின் ஆவணங்களில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டது.இதில் முன்னாள் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் ராணுவ நலச்சங்க பொருளாளர் சிவகுமார் நன்றி கூறினார்.

1 More update

Next Story