பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கியது


பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கியது
x

இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கியது.

சென்னை,

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் வழியாக கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படுகிறது. விண்ணப்பித்த 1.5 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு 4 சுற்றுகளாக கலந்தாய்வை நடத்த தொழில்நுட்ப கல்வி இயக்ககம் ஏற்பாடுகளை செய்துள்ளது.

சிறப்புப் பிரிவுக்கான கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் மாதம் 20 முதல் 24-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்த நிலையில் இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கி நடைபெற உள்ளது.

ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் நடைபெறவிருந்த பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு, நீட் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதத்தால் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கி நடைபெற உள்ளது.

இந்த கலந்தாய்வில் 1.57 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று முதல் நவ.13-ம் தேதி வரை 4 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. நீட் தோ்வு முடிவு தாமதத்தால், பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், முடிவுகள் வெளியானதையடுத்து பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியுள்ளது.

இன்று தமிழக அரசின் 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் 332 அரசுப்பள்ளி மாணவர்கள் பங்கேற்கின்றனர்.இந்த கலந்தாய்வு நான்கு சுற்றுகளாக நடத்தப்பட்டு, நவ.13-இல் முடிகிறது. முதல் சுற்று செப் -10, இரண்டாம் சுற்று செப்-25, மூன்றாம் சுற்று அக்-13, நான்காம் சுற்று அக்-29 இல் தொடங்கவுள்ளன. ஒவ்வொரு சுற்றிலும், மாணவா்களின் தரவரிசைப்படி பங்கேற்க பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நவ- 15 முதல் 20 வரை துணை கலந்தாய்வு நடைபெறவுள்ளது.


Next Story